Sunday, November 15, 2009

திருக்குறள்:141 (பிறன்மனை நாடும் அறிவீனம்...)

அதிகாரம்

: 15

பிறனில் விழையாமை

திருக்குறள் : 141

பிறன்மனை நாடும் அறிவீனம்...

In English

பிறன்பொருளாள்-பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம், பொருள், கண்டார்கண் இல்.

பொழிப்புரை :
பிறன் பொருளாகியவளை ஏமாற்றி மயக்கிப் பெண்டாள எண்ணும் மடமை, உலகின் நல் அறத்தையும், பொருளையும் கண்டு அறிந்தவரிடத்தே இல்லை.

விரிவுரை :
பிறனுடைய உடைமையாகிய அவனது மனைவியை மயக்கிப் பெண்டாள எண்ணும் அறிவீனம், உலகத்தின் அறமும், பொருளும் கண்டு தெளிந்தவரிடத்தே இல்லை.

பிறனுடைய உடைமையை எண்ணும் தீது உலக நீதி நெறி அறியாதவர் பால் மட்டுமே இருக்கும். அதிலும் உயிருள்ள பிறன் துணைவியை ஏமாற்றிப் பெண்டாள நினைப்பது சண்டாளக் குணம். அதனால் உண்டாகும் தீவினையை, பாவத்தை உணர்ந்தவர் அத்தகு தகாத செயலை மனத்தாலும் எண்ணார் என்பது மறை பொருள்.

பிறத்தியானின் மனைவியின் பால் மயங்கி மோகிக்கும் தன்மை அறிவற்ற, நீதி நேர்மையற்ற அரக்கர் குணமாகும். நன் நெறியும், அறமும், பொருளும் கற்று உணர்ந்தவரிடத்தே அத்தகைய தீக் குணம் இருக்காது. அறம், பொருள் எனும் நல்லறத்தைக் கற்றொழுகி நல் இன்பம் நுகர்வதே , முப்பால் வகுத்த வள்ளுவர் காட்டும் வழிமுறை என்பது ஈண்டு பெறத்தக்கது.

எனவே பிறத்தியாரின் உடைமையை விரும்பாத நல்லறம் பேணி நன் மக்களாய் இருப்போம்.

குறிப்புரை :
நன்னெறி அறிந்தோர் பிறத்தியானின் மனைவியை தீதாய் மனத்தாலும் எண்ணார்.

அருஞ்சொற் பொருள் :
பெட்டு - பொய், ஏமாற்றுச் சொல், மயக்குமொழி
பேதைமை - மடமை, அறியாமை

ஒப்புரை :

திருமந்திரம்: 202
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

மாணிக்க வாசகர். திருவாசகம்:
3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி
அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31

ஔவையார். ஆத்திச்சூடி:
87. மனந்தடு மாறேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

ஔவையார். நல்வழி:
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும். 20

பட்டினத்தார்: திரு ஏகம்ப மாலை: 11
வரிக்கோல வேல்விழி யார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கோது வேன் எழுத்து அஞ்சுஞ் சொலேன்! தமியேனுடலம்
நரிக்கோ? கழுகு பருந்தினுக்கோ? வெய்ய நாய்தனுக்கோ?
எரிக்கோ? இரையெதுக்கோ? இறைவா! கச்சி ஏகம்பனே!

சிவவாக்கியர்: 76
கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.

***

In English:

Chapter : 15

Non-adultery

Thirukkural : 141

Stupidity of adultery




In Tamil

piRanporuLAL-pettu ozhukum pEthaimai njAlaththu
aRam, poruL, kaNdArkaN il.

Meaning :
Those who have learned the world's virtuousness and values do not have the stupid and bad intentions of adulterine cheating and indulging the wife of others.

Explanation :
The stupidity of cheating by adulterine intentions with other's wife is not present with those who have learned the world's virtuousness.

Such bad intentions will only be with those who do not know the virtuousness of the world. It is heinous characteristic of one to cheat that too the living partner of the other. That who knows the ill and sin of that will never attempt to think such act is the implied meaning.

The infidelity nature to have sexual desire towards other's wife is the characteristic of no just and creatures like demons. It won't be with the wise and disciplined that have learnt the good virtues and its substance. The proper Love is only after learning the good virtues and the substances is the order Valluvar has prescribed is understandable even here.

Therefore let us be wise by following the good virtues and not having any desires for other's properties.

Message :
Those who know the virtues will never even think of others wife in bad intentions.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...